top of page

✨ ஊக்கமளிக்கும் சிந்தை 😁 °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°••°•°• ★ "தாவீதின் விசுவாசம்: தேடுதல், நம

Writer's picture: kvnaveen834kvnaveen834


2 சாமுவேல் 5:17-25

¹⁷ தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது அவர்கள் எல்லாரும் தாவீதைத் தேடும்படிவந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது, ஒரு அரணிப்பான இடத்துக்குப்போனான்.

¹⁸ பெலிஸ்தரோ வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்;

¹⁹ பெலிஸ்தருக்கு விரோதமாய்ப்போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர்: போ, பெலிஸ்தரை உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொன்னார்.

²⁰தாவீது பாகால் பிராசீமுக்கு வந்து, அங்கே அவர்களை முறிய அடித்து, தண்ணீர்கள் உடைத்தோடுகிறதுபோல, கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாக உடைத்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி, அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்று பேரிட்டான்.

²¹அங்கே பெலிஸ்தர் தங்கள் விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அவைகளைத் தாவீதும் அவன் மனுஷரும் சுட்டெரித்தார்கள்.

²²பெலிஸ்தர் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்;

²³தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராய்ப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,

²⁴முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.

²⁵கர்த்தர் தாவீதுக்குக் கட்டளையிட்டபிரகாரம் அவன் செய்து, பெலிஸ்தரைக் கேபா துவக்கிக் கேசேர் எல்லைமட்டும் முறிய அடித்தான்.

தேவனின் வழிகாட்டுதலை நாடுதல்:*

முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன் அல்லது சவால்களை எதிர்கொள்வதற்கு முன் கர்த்தரிடம் விசாரிக்கும் தாவீதின் நடைமுறையை இப்பகுதி எடுத்துக்காட்டுகிறது.

நாமும் தேவனிடம் விசாரித்து முடிவு எடுப்போம்.

கர்த்தருக்கு புகழ் மற்றும் மகிமையை வழங்குதல்:*

போரில் தனக்கு வெற்றியைக் கொடுத்தது கர்த்தர் தான் என்பதை தாவீது உணர்ந்தார்.

நாமும் மனத்தாழ்மையுடன் இருக்க வேண்டும், நம்முடைய சாதனைகளுக்காக கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும், நம்முடைய பலம் மற்றும் வெற்றிகளின் ஆதாரம் அவர் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

கர்த்தருடைய பலத்தில் நம்பிக்கை வைத்தல்:*

தாவீது இரண்டாவது முறை பெலிஸ்தியர்களை சந்திக்க நேர்ந்தபோது மீண்டும் கர்த்தரிடம் விசாரித்ததைக் காண்கிறோம். அவர் தனது சொந்த திறன்களிலோ அல்லது கடந்த கால அனுபவங்களிலோ நம்பிக்கை கொள்ளாமல் இறைவன் மீது நம்பிக்கை வைத்ததை இது காட்டுகிறது.

அதேபோல, நாம் நம்மை மட்டுமே சார்ந்து இருக்காமல் கர்த்தரின் பலத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

கர்த்தரின் அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிதல்:*

தாவீது கர்த்தருடைய அறிவுரைகளை உண்மையாக பின்பற்றினார், அது போர்களில் வெற்றிகரமான விளைவுகளை ஏற்படுத்தியது.

அவருடைய வழிகாட்டுதல் வழக்கத்திற்கு மாறானதாகவோ அல்லது நம்முடைய சொந்த திட்டங்களில் இருந்து வேறுபட்டதாகவோ தோன்றினாலும், கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய ஞானத்தை நம்புவதன் மதிப்பை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

எடுத்துக்கொள்ள வேண்டியவை:

¶ முடிவெடுப்பதில் கர்த்தரின் வழிகாட்டலை நாடுங்கள்.

¶ கர்த்தருக்கு புகழ் மற்றும் பெருமையை கொடுங்கள், வெற்றியில் தாழ்மையுடன் இருங்கள்

¶ நம்முடைய சொந்த திறமைகளை அல்ல, கர்த்தரின் பலத்தை நம்புங்கள்.

¶ கர்த்தருக்கு முழு மனதுடன் கீழ்ப்படியுங்கள்.

📖 இன்றைய தினத்திற்கான வேத பகுதி 📖

நீதிமொழிகள் 3:5-6

"உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்."

🙏🙏🙏🙏🙏🙏🙏


AUTHOR ✍✍✍✍✍✍✍✍

Sis Shincy Susan

Translation

Sis Tephilla Mathew

4 views0 comments

Recent Posts

See All

Encouraging Thoughts

हमारा जीवन विकास, चुनौतियों और परिवर्तन के क्षणों से भरी एक यात्रा है। जब हम बीते हुए दिनों की ओर मुड़कर देखते हैं, तो मन में रंगीन पल,...

Encouraging Thoughts

✨ *ஊக்கமளிக்கும் சிந்தனைகள் * 😁 °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°• ★ *மனிதனுக்கு கீழ்ப்படியாமல் தேவனுக்கு கீழ்ப்படிவது * ...

ENCOURAGING THOUGHTS

✨ *Encouraging thoughts* 😁 °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°• ★ *Obeying God by Disobeying Man* *Exodus 1:15-21* The story of the...

Comentários


bottom of page