top of page

நிலையான நன்றியுணர்வுக்கான பயணம்

நிலையான நன்றியுணர்வுக்கான பயணம்

✨🥰✨

"கேளுங்கள், அப்பொழுது ... பெற்றுக்கொள்வீர்கள்" -யோவான் 16:24

இது நம் அப்பா பிதாவின் வார்த்தைகள். ஒரு தனி அழகை அதனுடன் சேர்த்து வைத்திருக்கும் வார்த்தைகள். இது நம்பிக்கையின்மைக்கு மத்தியில் நம்பிக்கையையும், அர்த்தமற்றதன்  மத்தியில் அர்த்தத்தையும் அளிக்கிறது... நம்மை திசை திருப்பும் மிக கொந்தளிப்பான புயலில் ஆறுதலை அளிக்கிறது. ஆம், நமது உத்தம நலம் விரும்பி, நமது தேவைகள், இதயத்தின் விருப்பங்களில் மிகச்சிறிய மற்றும் பெரியவற்றைக் கூட அறிந்து அவைகளை வழங்கவும் கூடியவர்.

பெரும்பாலும் சில சமயங்களில், மேலே குறிப்பிடப்பட்ட வார்த்தைகளில் மட்டுமே நாம் ஆழமாக சிக்கிக் கொள்கிறோம், இது அதற்கு முந்தைய நிபந்தனையை புறக்கணிப்பதில் விளைகிறது. ஆம், மிகப் பெரிய ஈர்ப்பு விசை கொண்ட இரண்டு வார்த்தைகள். அது 'என் நாமத்தினாலே' அல்லது 'அவர் பெயரில்'. இந்த பகுதி சில சமயங்களில் நமக்கு ஊக்கமின்மையை தருகிறது. ஏனென்றால், நம்முடைய மற்றும் கர்த்தருடைய ஆசைகள், குறிப்பாக பொருளாதார தேவைகளின் விஷயங்களில் கைகோர்த்துச் செல்லாது என்று நம்புவது நமது பொதுவான போக்கு.

ஆனால், இங்கே ஆறுதல் செய்தி வருகிறது. நாம் அவருடைய அன்புக்குரிய பிள்ளைகள், அவரைப் பற்றிய சிறந்த புரிதலின் முன்னேற்றத்தில் நமது ஆவிக்குரியப் பயணம் இருக்க வேண்டும். நாம் அவரை இன்னும் ஆழமாக ஆழமாக அறிந்து கொள்ளும் போது, நமது தேவைகள் மற்றும் ஆசைகள் கடுமையாக வடிவமைக்கப்படும். நாம் எதைத் தொடர்ந்தாலும், அவருடைய பெயரை உயர்த்துவதே இறுதி நோக்கமாக இருக்கும் வகையில் வடிவமைக்கவும். எனவே அந்தக் குறிப்பில், நம்முடைய ஜெபங்களும் அதற்கு நம் பிதாவாகிய தேவனிடமிருந்து பதில்களும் எப்போதும் இணக்கமாகவே இருக்கும்.

எனவே அன்புக்குரியவர்களே,

நாம் அவருடன் நெருங்கி வருவோம், அவருடைய மகிமைக்காக மட்டுமே நமது தேவைகள் வடிவமைக்கப்படுவதைக் காணும் பேரின்ப அனுபவத்தை அனுபவிப்போம். நமது பிதாவாகிய தேவனுக்கு மிகுந்த நன்றியறிதலுக்கான ஒரு ஊடகமாக நமது ஜெபங்கள் இருக்கட்டும். அவருடனான இந்த இனிமையான தோழமைப் பயணம் நாளுக்கு நாள் செழிக்கட்டும்.

தேவன் உங்களை தொடர்ந்து ஆசிர்வதிப்பாராக....

🙏☺️🙏

Writer --- Sis Acsah Nelson

Translation---Sis Tephila Mathew

Mission sagacity Volunteer

Tamil

 
 
 

Recent Posts

See All
Encouraging Thoughts

*★ பரபாஸ் : நம் அனைவரின் சித்திரம் * இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னமே, பரபாஸ் என்ற ஒரு மனிதன் விடுதலை செய்யப்பட்டான்....

 
 
 
Encouraging Thoughts

★ बारब्‍बास: हम सब का एक चित्र ★ यीशु ने क्रूस पर चढ़ने से पहले, बारब्‍बास नामक एक व्यक्ति को रिहा किया गया था। उसकी कहानी उस दया और...

 
 
 
Encouraging Thoughts

*✨ ஊக்கமளிக்கும் சிந்தனைகள் 😁* °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°• *★ என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் ?* இந்த கேள்வியை இயேசு...

 
 
 

Comments


bottom of page