top of page

*★ பரபாஸ் : நம் அனைவரின் சித்திரம் *

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னமே, பரபாஸ் என்ற ஒரு மனிதன் விடுதலை செய்யப்பட்டான். நாம் அனைவரும் பெற்றிருக்கிற இரக்கத்தையும் விடுதலையையும் அவனுடைய சரித்திரமானது வெளிப்படுத்துகிறது.


பரபாஸ் என்பவன் ஒரு மோசமான கைதியாக, கலகக்காரனாக, கொலைக்கு குற்றவாளியாகவும் இருந்தான், (மாற்கு 15: 7). பண்டிகையின்போது ஒரு கைதியை விடுதலையாக்கும்படி பிலாத்து முன்வந்தபோது, எல்லா மக்களும் பரபாஸைத் தான் தேர்வுசெய்தார்கள். அதற்கு பதிலாக, பிதாவுடைய பாவமில்லாத மகன் — கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் சிலுவையில் அறையப்பட்டார் (மத்தேயு 27:15 – 26).


பரபாஸை ஒரு கதாநாயகன் என்று நினைப்பது எளிது, ஆனால் உண்மை என்னவென்றால் — அவர் நம் அனைவரின் அடையாளமாக இருக்கிறான்.

பரிசுத்த வேதாகமம் இவ்வாறாக சொல்கிறது “ஏனென்றால் எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாக மாறினார்கள் " என (ரோமர் 3:23)லும் பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். என

ரோமர் 6:23.


ஆமாம், நம்மத்தியில் பாவமில்லாதவர்கள் யாரும் இல்லாததினால், பரபாஸைப் போல, நாம் அனைவரும் தண்டிக்கப்பட்டு - மரணத்திற்கு தகுதியானவர்களாகவும் நித்தியமாக கர்த்தரை விட்டு பிரிந்தவர்களாக மாறினோம்.


ஆனால் தேவனோ, தம்முடைய பெரிதான அன்பினால், நாம் அனைவரும் இரட்சிக்கப்படும்படியான வழியை உண்டுபண்ணினார்.

"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3.16).

இயேசு கிறிஸ்து ஒரு உதவியற்ற குற்றவாளியல்ல மாறாக அவர் மனப்பூர்வமாக தம்மையே ஒப்புக்கொடுத்தார். அவர் மரித்ததினால் நாம் பிழைக்கிறோம். அவர் நம்முடைய பாவங்களை தம்மீது ஏற்றுக்கொண்டு தம்மை அவருடைய நீதியை நமக்கு கொடுத்து நம்மை நீதிமானாக மாற்றினார்.


இன்றைக்கும் இந்த அழைப்பு வந்துகொண்டு இருக்கிறது.

“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் ” (அப்போ.16:31).


இயேசு கிறிஸ்து தருகிற விடுதலையை நீங்கள் பெற்றுக்கொள்வீர்களா?


*📖 நினைவு கூறவேண்டிய வசனம் 📖*

*ரோமர் 5:8*

_“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.”_


*🙏ஜெபம்🙏*

_பரலோக பிதாவே,_

_உங்களுடைய அளவில்லாத இரக்கத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம். பரபாஸைப் போல குற்றவாளியாக இருந்தும், உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பலியினால் என்னை விடுதலையாக்கினீர். அந்த நன்றியுடன் அனுதினமும் வாழவும், உம்முடைய வழிகளில் நடந்து, உமக்கு மகிமை கொண்டுவரவும் எனக்கு உதவி செய்யும்._

_இயேசு கிறிஸ்த்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்._



✍️ ✍️ ✍️ ✍️ Sis Shincy Jonathan, Australia 🇦🇺


Transaltion @ Bro Jaya Singh


Mission Sagacity Volunteers

 
 
 

★ बारब्‍बास: हम सब का एक चित्र ★


यीशु ने क्रूस पर चढ़ने से पहले, बारब्‍बास नामक एक व्यक्ति को रिहा किया गया था। उसकी कहानी उस दया और स्वतंत्रता को दर्शाती है जो हम में से प्रत्येक को प्रदान की गई है।


बारब्‍बास एक कुख्यात कैदी था, जो राजद्रोह और हत्या का दोषी था (मरकुस 15:7)। जब पिलातुस ने पर्व के दौरान एक कैदी को रिहा करने की पेशकश की, तो भीड़ ने बारब्‍बास को चुना। और इसके बजाय, यीशु - परमेश्वर का निष्पाप पुत्र - क्रूस पर चढ़ाया जाने के लिए सौंप दिया गया (मत्ती 27:15-26)।


बारब्‍बास को एक खलनायक के रूप में देखना आसान है, लेकिन सच्चाई यह है कि - वह हम सब का एक चित्र है।

बाइबल कहती है, "क्योंकि सब ने पाप किया है और परमेश्वर की महिमा से वंचित रह गए हैं" (रोमियों 3:23)। और रोमियों 6:23 में हम पढ़ते हैं, "क्योंकि पाप की मज़दूरी मृत्यु है।"


हाँ, चूँकि हम में से कोई भी पापरहित नहीं है, बारब्‍बास की तरह, हम सब दोषी खड़े हैं - मृत्यु और परमेश्वर से अनन्त अलगाव के योग्य।


लेकिन परमेश्वर ने, अपने महान प्रेम में, हमारे उद्धार का एक मार्ग बनाया।

"क्योंकि परमेश्वर ने जगत से ऐसा प्रेम किया कि उसने अपना एकलौता पुत्र दे दिया, ताकि जो कोई उस पर विश्वास करे वह नाश न हो, परन्तु अनन्त जीवन पाए" (यूहन्ना 3:16)।

यीशु एक असहाय शिकार नहीं थे - वह एक स्वेच्छापूर्ण बलिदान थे। वह इसलिए मरे ताकि हम जी सकें।

उन्होंने हमारे पाप को अपने ऊपर ले लिया और बदले में हमें अपनी धार्मिकता प्रदान करते हैं।


निमंत्रण आज भी खड़ा है।

"प्रभु यीशु मसीह पर विश्वास कर, और तू उद्धार पाएगा" (प्रेरितों के काम 16:31)।


क्या आप उस स्वतंत्रता को स्वीकार करेंगे जो वह प्रदान करते हैं?


📖 याद रखने योग्य वचन 📖

रोमियों 5:8

"परन्तु परमेश्वर हम पर अपने प्रेम को इस रीति से प्रगट करता है कि जब हम पापी ही थे तभी मसीह हमारे लिए मर गया।"


🙏 प्रार्थना 🙏

हे स्वर्गीय पिता,

मैं तेरी असीम दया के लिए तुझे धन्यवाद देता हूँ। बारब्‍बास के समान दोषी होने पर भी, तूने मुझे अपने पुत्र के बलिदान के द्वारा स्वतंत्र कर दिया है। मेरी सहायता कर कि मैं प्रत्येक दिन कृतज्ञता में जीऊं, तेरे मार्गों पर चलूं और तेरे नाम की महिमा करूं।

यीशु मसीह के नाम में मैं प्रार्थना करता हूँ, आमीन।



✍️ ✍️ ✍️ Sis Shincy Jonathan Australia 🇦🇺


Transaltion by --- Job Matthew Abraham

 
 
 

*✨ ஊக்கமளிக்கும் சிந்தனைகள் 😁*

°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•

*★ என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் ?*


இந்த கேள்வியை இயேசு கிறிஸ்து தம்முடைய சீடர்களைப் பார்த்து கேட்டார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை பார்த்து இந்த கேள்வியை கேட்டால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும் ?


பரிசுத்த வேதாகமத்தில், இயேசு கிறிஸ்துவை குறித்து சிலர் யோவான் ஸ்நானகன் என்றும், சிலர் எலியா என்றும், சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும், நாசரேத்திலிருந்து வந்த தச்சனுடைய மகன் என்றும் சொன்னார்கள். இன்றைக்கும் சிலர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஒரு சரித்திர புருஷனாகவும், சிலர் அற்புதங்களை செய்கிறவராகவும், நல்ல போதனைகளை தருகிற போதகராகவும், சிலுவையில் மரித்தவராகவும் நினைக்கிறார்கள். இன்னும் சிலர், போராட்டமான நேரத்தில் நோக்கி பார்க்கிறவராக இயேசு கிறிஸ்துவை நினைக்கிறார்கள்.


ஆனால் இயேசு கிறிஸ்துவை உண்மையாக அறிந்தவர்களுக்கு அவர் இன்னும் மேலானவராக இருக்கிறார்.

ஒரு நண்பனிடம் பேசுவதுபோல அவர் ஆபிராகம் மற்றும் மோசேயுடன் பேசியிருக்கிறார். அவரை தன்னுடைய மேய்ப்பராக தாவீது அறிந்திருந்தார் (சங்கீதம் 23:1). நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று பேதுரு சொன்னார். (மத்தேயு 16:16).


சரியான பதில் என்னவென்றால் — அவர் தான் கிறிஸ்து, மெய்யான இரட்சகர், அளவில்லாமல் மனிதனை நேசிக்கிற தேவகுமாரனாக இருக்கிறார். அவர் தம்முடைய ஜீவனை கொடுத்து நமக்கு நித்திய ஜீவனை தந்திருக்கிறார்.


நம்மை ஒருபோதும் கைவிட்டுவிடாத நல்ல நண்பராக (யோசுவா 1:5), நம்முடைய உதவியாளர் (எபிரெயர் 13:6), நம்முடைய தேற்றரவாளனும் நம்முடைய பெலனுமாக இருக்கிறார் (சங்கீதம் 27:1).


உங்களுடனும் என்னுடனும் அவர் தனிப்பட்ட உறவை வைத்துக்கொள்ள விரும்புகிறார்.

இன்றைக்கு ஜெபத்தில் அவருடன் பேசினீர்களா?

இன்றைக்கு வேதம் வாசித்து அவருடைய சத்தம் கேட்டிர்களா?


இயேசு கிறிஸ்து உங்கள் சத்தத்தை கேட்பதற்கு ஆவலாக இருக்கிறார். நாம் அவருடன் நெருங்கி வந்து அவருக்கு முதலிடம் கொடுத்தால், நம்முடைய எல்லா கேள்விகளுக்கும் பதிலை நிச்சயம் தருவார் _"ஆண்டவரே, நீரே எனக்கு எல்லாம்."_


*📖 நினைவுகூர வேண்டிய வசனம் 📖*

*யாக்கோபு 4:8*

_"தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்."_


*🙏 ஜெபம் 🙏*

_"ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உங்களுடைய ஜீவனை கொடுத்து எனக்கு நித்திய ஜீவனை தந்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடன் ஒரு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள கிருபை செய்யும். உம்மை அதிகமாக அறியவும், உம்மை அனுதினமும் தேடவும், உம்முடைய வழிகளில் நடக்கவும் கிருபை செய்யும். ஆமென் ."_



✍️ ✍️ ✍️ ✍️ Sis Shincy Jonathan, Australia 🇦🇺


Transaltion by -- Bro Jaya Singh


Mission Sagacity Volunteers

 
 
 
bottom of page